[poorna_bath.jpg]முன்பெல்லாம் சினிமாவில்தான் குளியல் காட்சிகள் வரும்,அந்தக்காட்சிகளையே குடும்பத்துடன் பார்க்க முடியாமல் இருக்கும்.தமிழர்களின் பண்பாடுகள்,பழக்க வழக்கங்கள் மிகவும் கட்டுப்பாடானவையாகவும்,கண்ணியம் மிக்கதாகவும் இருந்தது.அண்மையில் வந்த செய்தி ஒன்றை அனைவரும் நிச்சயம் படித்திருப்பீர்கள்.புலம்பெயர் நாடொன்றில் இருந்து சென்ற பெண் குளித்துக்கொண்டிருந்தபோது பனையில் இருந்து ஒருவர் பார்த்ததாகவும் அதனால் அவருக்கு தர்ம அடி விழுந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் உண்மையில் தமிழன் வெட்கப்படும்படியாக தமிழ் பெண்களும் ஆண்களும் தாம் குளிப்பதை நிழற்படமாகவும் கானொளி ஆகவும் முக நூல்களிலே பதிவேற்றி வருகிறார்கள்.இப்படியான செயல்கள் உண்மையிலேயே வெட்கப்படவேண்டிய விடயமாகும்.தமிழர்களின் கலை கலாச்சாரங்களை சிங்களவர்கள் அழித்து வருகிறார்கள் என்று கூக்குரலிடும் தமிழ் ஆர்வலர்கள் இவற்றை கண்டுகொள்ளாதது மிகவும் வேதனைக்குரியது.இனிமேலாவது தமிழ் ஆடவரும் பெண்டிரும் தமது உல்லாசத்தை இணையம் ஊடாக விளம்பரப்படுத்தாமல் இருந்தால் அதுவே தமிழுக்கும்,தமிழர்களுக்கும் நல்லது.